search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூ வியாபாரி"

    • கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை சேர்ந்தவர் அமுதா(43). பூவியாபாரி. இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பொம்மை நாயக்கன்பாளையம் ஆகும். இவர் திருவள்ளூர் ரெயில் நிலையம் மற்றும் ரெயிலில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அமுதா பூ வியாபாரம் முடித்து வீட்டு திரும்பினார். அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவுக்காரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் நடைமேடை 4-ல் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென அமுதாவிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனை அமுதா கண்டித்து தன்னிடம் பூ அறுக்க வைத்திருந்த கத்தியை காட்டி எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் திடீரென அந்த கத்தியை பறித்து அமுதாவின் கழுத்தை அறுத்தார். மேலும் அவரது கை, மற்றும் இடுப்பில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கழுத்து அறுக்கப்பட்டதில் அமுதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ரகளையில் ஈடுபட்டு அமுதாவின் கழுத்தை அறுத்து தப்பிய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவரை பிடிக்க போலுசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் பெண்பூவியாபாரியின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • செல்போன் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்தார்.

    கோவை 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 44). இவர் அங்குள்ள பூக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.


    சம்பவத்தன்று இவர் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென செந்தில் குமாரை தடுத்து நிறுத்தி குடிக்க பணம் கேட்டார்.

    அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். உடனே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார். பின்னர் செந்தில் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார்.

    அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.


    அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பி சென்றார். இதுகுறித்து செந்தில் குமார் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த லால் என்கிற சபீர் அகமது (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×